நாட்டுக்கு அவர் நிச்சயம் தேவை..ராகுல்காந்திக்கு சொத்துகளை எழுதி வைத்த மூதாட்டி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா முன்ஜியால். இவர் தனது 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும், 10 டோலா தங்கத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். 10 டோலா என்பது சுமார் 116 கிராம் தங்கம் ஆகும்.  புஷ்பா முன்ஜியால் டெஹ்ராடூன் நீதிமன்றத்தில் தனது சொத்துக்களின் உரிமையை ராகுல் காந்திக்கு அளித்து உயிலை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறாரா ப.சிதம்பரம்? காங்கிரஸ் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்?

ராகுல் காந்தியின் எண்ணங்களால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால்தான் தனது சொத்தை அவருக்கு வழங்குவதாகவும் கூறிய புஷ்பா முன்ஜியால், ராகுல் காந்தியும், அவரது யோசனைகளும் நாட்டுக்கு அவசியம் எனவும் விவரித்தார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை நாட்டின் முன்னேற்றத்திற்காக ராகுல்காந்தியின் கும்பம் பலத் தியாகங்களை செய்துள்ளதாகவும் புஷ்பா முன்ஜியால் கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புஷ்பா முன்ஜியால் தனது உயிலை வழங்கினார். 

மேலும் படிக்க | காங்கிரசுடன் இணைந்து போட்டியிட தயார்; 2024 மக்களவை தேர்தலை குறிவைக்கும் மம்தா பானர்ஜி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *